Saturday, December 28, 2013

சரி..எதாவது எழுதுவோம்.!!

முன்குறிப்பு:

மொத லைன் வாசிக்கும் போதே இது கொடூர மொக்கை அப்டின்னு உங்க ESP சொல்லுச்சுனா நேராக கடைசி பகுதிக்கு செல்லவும்.

                      வாழ்க்கன்றது என்னனா...அப்படி எதுவும் 2014 காலண்டர் எல்லாம் பாத்து தத்துவம் எதுவும் இங்க கொட்ட போறது இல்ல. ஏதோ இன்னிக்கு வழக்கத்த விட ரொம்ப வெட்டியா இருக்கோமே, எல்லாரும் வாழ்க்கை வாழ்க்கைனு மூஞ்சிபுக், வாட்சப், ட்விட்டர்ன்னு  வளைச்சு  வளைச்சு ஸ்டேட்டஸ் போடுறாங்களே  நம்மளும் கொஞ்சம் இந்த வாழ்க்கைய பத்தி ரெண்டு வரில ஸ்டேட்டஸ் போடுவோம்னு தோணுச்சு. 


நம்ம பிரைனுக்கு பரீட்சைல படிச்ச கேள்விக்கு பதில் யோசிக்கவே மூணு மணிநேரம் ஆகும். புதுசா யோசிக்கலாம்னா எங்க போறது...ஒரு மண்ணும் தோணல.நம்மளும் பேசாம பீர்பால், தெனாலிராமன் கதைல வர கடைசி வரி எடுத்து அப்துல் கலாம் சொன்னாரு, A.K அகமது சொன்னாருன்னு போட்டா தான் வாழ்க்க ஸ்டேட்டஸ் போட முடியும் போல.


ஆனா இந்த அறிவாளி/நல்லவன் சீன் போடுறதுக்காக இப்படி எதாவது யோசிக்கும் போது தான் நம்மையும் அறியாம நெறைய விஷயம் மனசை தொட்டு நெருடி வருடி செல்கிறது.மிர்ச்சி சிவா டான்ஸ் மாதிரி அலடிக்காம வாழ்க்கை போய்ட்டு இருக்குன்னு நெனச்சுட்டே இருக்கும் போது தான் ரங்கு ரக்கர ரங்கு ரக்கர ன்னு TR  மாதிரி நம்மளையும் ஆட வச்சுருது.


பத்தாவது முடிச்சுட்டு +2ல என்ன குரூப் எடுக்குறதுன்னு குழப்பம். அப்புறம் +2 முடிச்சுட்டு என்ன பண்ண போறோம்னே தெரியாம எல்லா காலேஜ்லையும்  அப்ளிகேஷன் வாங்கி வச்சுட்டு எந்த காலேஜ் போறதுன்னு ஒரு குழப்பம். நல்ல காலேஜ் கெடைச்சாலும் எந்த கோர்ஸ் எடுக்குறதுன்னு குழப்பம். காலேஜ் முடிச்சு வேலைக்கு போனா இந்த வேலை நமக்கு செட் ஆகுமான்னு குழப்பம். இதுக்கு அப்புறம் இருக்க ஸ்டேஜ்ல என்ன குழப்பம் இருக்குன்னு அனுபவிச்சு பாத்தா தான் தெரியும். நம்ம நெனச்சது எல்லாமே ரூம்ல வச்ச வண்டி சாவி மாதிரி நமக்கு எப்போ வேணுமோ அப்போ மட்டும் நமக்கு கெடைக்குறதே இல்ல.


இந்த வாழ்க்கை..!! வைகை புயலுக்கு நாலா பக்கமும் லொஜக் மொஜக்குன்னு விழுகுற மாதிரி ஒரு பேட்ட மட்டும் கைல கொடுத்துட்டு '6' பால்லயும் ஒரே நேரத்துல போடுது ; 120 ரூவா வாங்கிட்டு சில நேரம் சிவாஜி படம் ஒட்டுது, பல நேரம் ஒண்ணுமே புரியாத கடல் படம் காட்டுது; Dial-up கன்னக்க்ஷன்ல  Youtube வீடியோ பாக்குற மாதிரி சில நேரம் ஒரே எடத்துல சுத்துது, சில நேரம் நமக்கு விளம்பரம் கூட Buffer ஆக மாட்டேங்குது; 



எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது.!! 

                     தெரியாம # பட்டன் அமுக்குனதுகாக மூணு  மாசமா சேத்து வச்சுருந்த 30 ரூவா balance ஒரே நாள்ல caller tune  ஆக்டிவேட் பண்ணி புஸ் ஆகுறது, 125 ரூவா குடுத்து மெசேஜ் பூஸ்ட்டர் லாம் போட்டாலும் airtel காரனுங்க மட்டுமே மெசேஜ் அனுப்புறது, தீபாவளிக்கு வந்த நாலு படத்துல நம்ம போய் கூட்டத்துல 2 ஹவர் நின்னு டிக்கட் எடுத்து பாக்குற படம் மட்டும் காட்டு மொக்கையா இருக்குறது, இன்டர்வல்ல வாங்குன ஐஸ்ச  சாப்புடறது குள்ள கூட்டத்துல எவனாவது அத தட்டி விடறது,  ஆபீஸ்ல இருக்க அழகான புள்ளைங்க எல்லாம் Activa'ல வர அம்பி கூட மட்டும் பேசுறது ,  ஒரு காப்பிய மட்டும் குடிச்சிட்டு விடிய விடிய யாரடி நீ மோகினி தனுஷ் மாதிரி உக்காந்து வேலைய பாத்துட்டு கண்ணு வீங்கி  அடுத்த நாள் போனா..என்ன மச்சி நைட் எல்லாம் whatsapp ah ன்னு கேட்டு கடுபேத்துறது, சீரியஸ்ஆ நம்ம ஒரு மேட்டர் சொல்லும் போது எல்லாரும் குபீர் சிரிப்பு வெளிப்படுத்தி நமக்கு பல்பு குடுக்குறது, எனக்கு மட்டும் தான் லக் இல்லைன்னு பீல் பண்றது...ச்ச எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது.?!?

ஆனா  இப்படி எதாவது மொக்கயா நடக்குறப்ப மட்டும் குறை சொல்லும் மனசு நமக்கு favor ah எதாவது நடக்குறப்ப இந்த கேள்விய கேக்க மறந்துருது..!


முன் குறிப்புல சொன்ன கடைசி  பகுதி வந்துருச்சு.!


மச்சான் சாம்பார் சூப்பர் டா..!!அப்படின்னு பேச்சுலர் ரூம்ல வச்ச புளிக்குழம்பு பாத்து நண்பன் சொல்ற மாதிரி தான் வாழ்க்கையும், புளிக்குழம்பா சாம்பாரான்னு யோசிக்கிறத விட்டுட்டு சாப்பாடு செம்ம மச்சின்னு கெடைச்ச சாப்பாட நிம்மதியா சாப்டுட்டு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வேலைய பாக்க வேண்டியது தான்.! 


ஒரு ஸ்டேட்டஸ் ரெண்டு வரி ன்னு யோசிச்சதுக்கு 3 பக்கம் கிறுக்கிருக்கேன். இனிமேல் யாராவது வாழ்க்கைன்னு தத்துவம் போடுங்க.!! 

7 comments:

Azarudeen Batcha said...

மாமா பிச்சிட போ.... அதுவும் கடைசி தத்துவம் அருமை....

Anonymous said...

R.Karthi Kumar: Pandiya unnakku enna achu da... :P

Bloggerfly said...

sema sema sema! :D

Sari.. neengalum edho vaalkaiya pathi eludhirukeenga!! :D

பாண்டியராஜன் said...

@Azar : nandri maama..!!

பாண்டியராஜன் said...

@Suganthi : kaasa panama summa solli vaipom.!!

Unknown said...

semma ji kalakunga da
..inime elam apdithan amm..

Unknown said...

semma ji kalakunga da
..inime elam apdithan amm..